வடமாகண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும்

#SriLanka #NorthernProvince #Article #economy #Project
Mayoorikka
1 year ago
வடமாகண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு , வடக்கு கிழக்கு மாகணங்கள் , இலங்கையின் அன்றாட தேவையின் 40% வீத தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உற்பத்திப் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருந்தது  

குறிப்பாக அந்தக்காலத்தில் A9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து புகையிலை , வெங்காயம் , மரக்கறிகள் , மீன் மற்றும் கடலுணவுப்பொருட்கள் பனையோலைப்பாய் , பினாட்டு ,  மற்றும் பனம்பொருட்கள்.   காங்கேசன் துறைச் சிமேந்து , வாழைக்குஙைகள் என , பல்வேறு  உற்பத்திப் பண்டங்களை  ஏற்றிய 200 க்கு மேற்பட்ட லொறிகள்   கொழும்பு மற்றும் தென்னிலங்கையை நோக்கி  செல்வதனை அந்தக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருப்பீர்கள் . 

கிளிநொச்சி முல்லைத்தீவு , மன்னார் பகுதிகளில் இருந்து , செத்தல் மிளகாய்.  நெல் , அரிசி , மற்றும் கடலுணவுப்பொருட்கள்   ஏற்றிய பொருட்கள் தென் இலங்கையை நோக்கிச் சென்றன .

திருமலை , மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் இருந்து , கடலுணவுப் பொருட்கள் , நெல் என்பன லொறிகள் மூலம் சென்றன.

இத்தகைய பொருட்களைச் சந்தைப் படுத்திய , வடக்கிழக்கைச் சேரந்த தமிழ்மக்கள்.   மண்ணெய் , பெற்றோல் போன்ற எரிபொருட்கள்.  மற்றும் கட்டட  பொருட்கள் , உள்ளிட்ட இதர பொருட்களை , தென் இலங்கையில் இருந்து வரும் போது ,  கொள்வனவு செய்து வாங்கி வருவார்கள்  வர்தகப்பெருமக்கள் .

கிட்டத்தட்ட பணப்புழக்கம் இருந்தாலும் , பண்டமாற்று மாதிரியான விடயம் இடம்பெற்றது .

இந்தக்காலப்பகுதியில் தமிழர்பகுதிகள் , முன்னேற்றகரமான அபிவிருத்தியை நோக்கிச் சென்றது . 

ஒரு உற்பத்திப் பொருளாதாரம் தமிழர்களின் கையில் இருந்தது .

மாணவர்கள் கூட பாடசாலையில் இருந்து வீடு வந்தவுடன். மேற்குலக விவசாய செய்கையாளரின் குடும்பங்களைப்போல   வயல்களிலும்   தோட்டங்களிலும் பெற்றோர்க்குத் துணையாக வேலை செய்து   படித்து வந்தார்கள் . 

பெரியளவு பணம் இல்லாவிட்டாலும் , வீட்டின் நாளாந்த வாழ்க்கைச் செலவைக் கழித்து   சொற்ப பணத்தைச் சேமித்து வந்தார்கள்  அத்தகைய வாழ்க்கை முறை அன்றிருந்தது . 

ஆனால் தற்போது இலங்கை சென்று திரும்பியபோது அவதானித்த விடயம் , 
அன்றைய காலம் போல , தமிழர்களிடம் உற்பத்திகள் எதுவும் அன்றையது போல இல்லை . உற்பத்திப் பொருளாதாரத்தில் , ஒப்பீட்டு ரீதியில் வளர்சசி இல்லை . 

தமிழர்பகுதியில் இருந்து , கடலுணவு , நெல் , அரிசி தவிர்ந்த ஏனைய உற்பத்திப் பொருட்கள் , தென்னிலங்கைச் சந்தைகளுக்கு செல்வது அருகிவிட்டது . 

அத்தகைய உற்பத்தி முயற்சிகள் , சொல்லும் அளவுக்கு , பெரிதாக செய்வதும் இல்லை .

யாழ்ப்பாணம் , வடக்கு கிழக்கு மாகணங்களில் இருந்து உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் குறைவடைந்து , கொழும்பு , தம்புள்ள , புத்தளம் , மற்றும் தென்இலங்கைப் பகுதிகளில் இருந்தே பெருமளவு உற்பத்திப்பொருட்கள் , வடகிழக்கு தமிழர்பகுதிகளுக்குள் வருகின்றன .

அன்று தென்னிலங்கையில் சந்தைவாய்ப்பைக் கொண்டிருந்த தமிழர்கள், இன்று தென்னிலங்கை மக்களுக்கு , தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களில் சந்தைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து , சோம்பெறிச் சமூகமாக  மாறிக்கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம் .

இதற்கான காரணங்கள்   முற்றுமுழுதாக புலம்பெயர் தமிழர்களே காரணம் . 

பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களில் உற்பத்திப்பொருளாதார முறைமையின் கீழ் , இலங்கையில் வாழ்ந்து , கஷ்டங்கள் பலவற்றை சந்தித்தவர்கள் . 

அந்த கஷ்டங்கள் துன்பங்களின் நினைவுகளோடு வாழும் பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களின் மனநிலை .

அந்த மனநிலையின் பிரகாரம் அந்த வாழ்வியலின்  உணர்வாக , தனது தாய் , தந்தை சகோதர்ர்கள் , உறவினர்கள் கஷடப்படக்கூடாது என்பதற்காக ,  பெருமளவு பணத்தினை வடகிழக்கு மாகணங்களில் உள்ள , தமது உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள் . 

பாடசாலைகள் சனசமூகநிலையங்கள் , மற்றும் பொது அமைப்புக்கள் என்பவற்றின்  கட்டுமானங்களுக்கு எனவும் பெருமளவு பணத்தை அனுப்புகிறார்கள் . 

உள்ளக கட்டுமான செயற்பாடுகள் என்பற்றுக்கும் பணத்தை அனுப்புகிறார்கள் . 

அதனைவிட புலம்பெயர் தேசத்தில். யுத்தம் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு என , சமூக சேவைநிறுவனங்கள் , அறங்கட்டளைகள் ,நலன்புரி அமைப்புக்கள் என பலவற்றை அமைந்து ,  அவை மூலமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரதேவைகளுக்காக நன்கொடைகளை அனுப்பி உதவுகிறார்கள் .

ஆகவே ஒட்டுமொத்தமாக , புலம்பெயர் தமிழர்களின் பெருந்தொகைப் பணம் , வடகிழக்கு மாகணங்களில் உள்ள , தமிழர்களைச் சென்றடைகிறது .

இந்தப்பணமே , வட கிழக்கில் வாழும் பெரும்பாலான தமழர்களைச் சோம்பேறி ஆக்கியுள்ளது . 

இந்தப்பணத்தின் வருகையால் குழந்தைப் பிறப்பில் இருந்து , மரணச்சடங்குவரை கேளிக்கைகளும் , செல்வச் செருக்கும் மிகுந்த வாழ்வியலாக மாறியிருக்கிறது . 

உடல் உழைப்பு பின்தள்ளப்பட்டு விட்டது .  இதனால்  அங்கு வாழும் இளைய சமூகத்திற்கான ஒய்வு நேரங்கள் அதிகமாகின்றன .

தேவைக்கு அதிகமான பணமும் , அதிக ஒய்வு நேரமும் ஒரு சமூகத்தைச் சோம்பெறிகள் ஆக்குவதோடு , குற்றச்செயல்களிலும் ஈடுபட வைக்கிறது . 

இதன் தாக்கம் வடகிழக்கு இளைய சமூகத்தின் பெரும்பாலனவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை , சமூகப்பெரியவர்களிடம் இருக்கிறது .

அதைவிட புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப் படும் , பெருந்தொகைப் பணம் , வடகிழக்கில் தங்கி நிற்பது கிடையாது . நிதிநிறுவனங்கள் , வங்கிகள் மூலமாக , தென்னிலங்கை முதலீட்டாளரகள் , உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது .

வடகிழக்கில் உற்பத்திப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் , வாழ்க்கைக்கான பொருட்கள் சேவைகள் பெருமளவு தென்னிலங்கைப் பகுதியில் இருந்தே வடகிழக்குப் பகுதிகளுக்கு கிடைப்பதால் ,  அவற்றுகான கொடுப்பனவாக, புலம்பெயர் தமிழர்களால் அனுப்ப படும் பணம் , இன்னொரு மார்ககமாக தென்னிலங்கையைச் சென்றடைகிறது . 

அடிப்படையில் நோக்கினால் புலம்பெயர் தமிழர்களால் வடகிழக்கு பகுதியில் வாழும் தமது உறவுகளுக்கு அனுப்பும் பணம் , தென்னிலங்கைச் சமூகத்தினைச் சென்றடைகிறது என்கின்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும் .

புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் வடகிழக்கில் உள்ள சொந்தங்களுக்கு பணம் , எதிர்காலத்திலும்  அனுப்ப முடியுமா என்றால் , அது விவாத்திற்கு உட்பட்டதே . 
அதற்க்கு ஒரு சமூகவியல் பார்வை அவசியம் .

1985/1990 களில். புலம்பெயர்ந்து வந்த , ஊர் மண்வாசனையை நினைத்துக்கொண்டு இருக்கும் அந்த புலம்பெயர் சமூகம் மூப்படைந்துவிட்டது . 

ஓய்வூதியத்தினை அண்டிவிட்டது . 

அவர்களால் இனி பணம் அனுப்புவது குறைவடையப் போகிறது . 

அவர்கள் பிள்ளைகள் , பேரப்பிள்ளைகள் என்பனவற்றிலேயே அக்கறை காட்டத்தொடங்கிவிட்டார்கள்.

புலம்பெயர் நாடுகளில் பிறந்த பிள்ளைகள் இலங்கை வந்து திரும்பிய போது , ஏற்பட்ட வாழ்வியல் ஒப்பீடு திருப்திகரமானது இல்லை .

அவர்கள் இலங்கையில் உள்ள தாய்வழி உறவுக்கோ , தந்தைவழி உறவுக்கோ ,  உதவுவார்கள் என கட்டியம் கூற முடியாது . 

எனவே இன்னும் 10 வருடங்களில. , புலம பெயர் தமிழர்களின்  பணம் , வடகிழக்கு மாகணங்களுக்கு வருவது வீழ்ச்சியடையும் .

இது வடகிழக்கு தமிழர்களை மேலும் பாதிப்படைச் செய்யும் . 

எனவே வடகிழக்குத் தமிழர்கள் , கொள்முதல் பொருளாதாரமாக தங்கி இருக்காமல் , 
உற்பத்திப்பொருளாதாரத்தினை கட்டி அமைக்கவேண்டிய தேவை , அவசியமாகவும் அவரமாகவும் இருக்கிறது . 

இதன் அவசியப்பாட்டை உணர்ந்து அனைவரும் செயலாற்றவேண்டும் .

ஆக்கம் :- மோகன் பரன்