எந்நாடானாலும் நம் நாட்டிற்கு ஈடாகுமா? இலங்கையைப்பற்றி சில குறிப்புக்கள்..
#history
#Northern Province
Mugunthan Mugunthan
11 months ago

- வடக்கில் சிறிய மாவட்டம் – யாழ்ப்பாணம்
- வடக்கில் பெரிய மாவட்டம் – முல்லைத்தீவு
- வடக்கில் கடற்பரப்பில்லாத மாவட்டம் – வவுனியா.
- வடக்கில் குளங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டம் – முல்லைத்தீவு
- வடக்கில் காணப்படும் பெரிய தீவு – நெடுந்தீவு
- வடக்கில் சிலிக்கன் மணல் காணப்படும் இடம் - நாகர்கோவில்
- வடக்கு மாகாணசபை அமைந்துள்ள இடம் – கைதடி
- வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி கூடிய மாவட்டம் - யாழ்ப்பாணம்
- வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டம் - முல்லைத்தீவு
- வடமாகாணத்தின் பரப்பளவு – 8884 சதுர கிலோமீட்டர்
- வடமாகாணத்தின் நிலப்பரப்பு 8290 சதுர கிலோமீட்டர்
- வடக்கில் எண்ணெய் வளம் உள்ள மாவட்டம் – மன்னார்
- வடக்கில் சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் – குருநகர், யாழ்ப்பாணம்
- வடக்கில் அல்லது இலங்கையில் நீளமான பாலம் – வேலணை_புங்குடுதீவு
- வடக்கில் காணப்படும் முனை –பருத்தித்துறை (பேதுறு)
- வடக்கில் காணப்படும் நீரேரிகள் - கச்சாய் அல்லது கிளாலி, சுண்டிக்குளம், தொண்டைமானாறு
- இலங்கையின் வடக்கின் புராதனபெயர் - நயினாதீவு (நாகதீவு)
- வடக்கில் இருந்து பாராளுமன்றம் சென்ற முதலாவது பெண் - 15 February 1989 - 24 June 1994 – திருமதி புலேந்திரன் ராஜமனோகரி – வன்னி
- வடக்கில் ஓட்டு தொழிற்சாலை ஒட்டுசுட்டானிலும், உப்பளம் ஆனையிறவிலும், சீமேந்து
- தொழிற்சாலை காங்கேசன்துறையிலும் இரசாயன தொழிற்சாலை பரந்தனிலும் காணப்படுகிறது
- வடமாகாணத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் விலங்குகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடம் - சுண்டிக்குளம் (கிளிநொச்சி மாவட்டம்)
- வேலணை தீவு அல்லது லைடன் தீவுகள் எனப்படுவது வடக்கில் பெரிய கூட்டிணைக்கப்பட்ட தீவாகும்
- யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒரே ஆறு – வழுக்கையாறு (பருவகால ஆறு)
- இலங்கையில் காணப்படும் குளங்களில் மூன்றாவது பெரிய குளம் - இரணைமடுக் குளம்
- "செங்கையாழியன்" என அழைக்கப்படும் வடமாகாணத்தின் மறைந்த எழுத்தாளர் - கலாநிதி க.குணராசா
- வடக்கில் உள்ள கைத்தொழிற்பேட்டை - அச்சுவேலி
- வவுனிக்குளத்தை கட்டுவித்தவன் - எல்லாளன்.
- பனைமரத்தின் விஞ்ஞான பெயர் - 'Borassus flabellifer'
- வடக்கிற்கான ரயில் சேவை 1989.01.19 பின் 13.10.2014 உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
- வடக்கு ரயில் பாதையை புனரமைத்த இந்திய நிறுவனம் – இர்கொன்
- இரணைமடு நீர் விநியோக திட்டத்திற்கு உதவி வழங்குவது - ஆசிய அபிவிருத்தி வங்கி
- இரணமடு நீர் விநியோக திட்டத்திற்கு மாற்றீடான மற்றுமொரு திட்டம் - ஆறுமுகம் திட்டம்.
- யாழ்ப்பான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது - ஓகஸ்ட் 1, 1974
- வடமாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மரம் நடுகை தினம் நவம்பர் 01 – 30 வரை கொண்டாடப்படுகிறது.
- மருத மரத்தின் விஞ்ஞான பெயர் – Terminalia elliptica.
- வெண்டாமரை பூவின் விஞ்ஞான பெயர் – Nelumbo nucifera.
- ஆண் மானின் விஞ்ஞான பெயர் – Axis axis.
- சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான நிறுவனம் - நொதேர்ன் பவர்
- யாழ்ப்பான நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஆண்டு - 31.05.1981
- யாழ்ப்பாண வரலாற்றை கூறும் நூல்கள் - வையாபாடல், யாழ் வைபவ மாலை.
- யாழ்ப்பான பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் – சேர் பொன் இராமநாதன்.
- முறிந்த பனை (The Broken Palmyrah) என்ற நூலை எழுதியவர்கள் – ராஜினி திராணகம, ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம்.
- மன்னருக்கான ரயில் சேவைகள் 1914ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது - 14.03.2015.
- மன்னார் – நாவற்குழி பிரதான பாதை A32.
- பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை A35.
- மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான பாதை A34.
- முல்லைத்தீவோடு இணைக்கப்பட்ட பிரதேசம் – மணலாறு (வெலிஓயா).
- யாழ் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது – 1933 ஆம் ஆண்டு.
- இலங்கையில் வறுமை கூடிய மாவட்டம் -கிளிநொச்சி.
- மதுபான விற்பனை மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படும் மாவட்டம் - யாழ்ப்பாணம்
- யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
- யாழ் கோட்டை போர்த்துகேயரால் 1625ல் கட்டப்பட்டது.
- தற்போது காணப்படும் யாழ் கோட்டை ஒல்லாந்தரால் உடைக்கப்பட்டு 1658 யூன் 23 ற்கு பின் கட்டப்பட்டதாகும்.
- பண்டைய யாழ்ப்பாண அரசின் நாணயம் – சேது நாணயம்.
- யாழ்ப்பாண அரசின் பழைய சின்னமாக விளங்குவது – நந்தி.
- வன்னி இராட்சியம் வீழ்ச்சியடைந்தது - 1803ம் ஆண்டு.
- ஒல்லாந்தரால் சொத்துரிமை தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு மட்டும் உரித்தான சட்டம் – தேசவழமைச் சட்டம்.
- யாழ் நூலை எழுதியவர் – சுவாமி விபுலானந்தர் 1947.
- சுவாமி விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன் 1892.
- சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - ஆறுமுகநாவலர் (1822 டிசம்பர் 18 ஆறுமுகம்பிள்ளை).
- நாவலர் 1872 இல் முதல் உருவாகிய சைவ ஆங்கிலப் பாடசாலை - வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை.
- மன்னாரில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்ட நிறுவனம் – கெய்ன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்