ரயிலுடன் கனரக வாகனம் ஒன்று மோதியதில் விபத்து
Kanimoli
2 years ago

ரயிலுடன் கனரக வாகனம் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் புத்தளம் மற்றும் குரணை ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி இன்று (15) காலை 9.30 மணியளவில் புறப்பட்ட புகையிரதம் குரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணித்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.



