3 விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்த இந்திய தேசிய புலனாய்வு பிரிவு

Prasu
3 years ago
3 விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்த இந்திய தேசிய புலனாய்வு பிரிவு

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட, விடுதலை புலிகள்  அமைப்பை  உயிர்ப்பிக்க திட்டமிட்டதாகக் கூறப்படும் மூன்று விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு பிரிவு  (என்ஐஏ), நேற்று  வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகைகளை  தாக்கல் செய்தது.

தமிழகத்தில் வைத்து  கைது செய்யப்பட்ட  - நவீன் என்கிற சக்கரவர்த்தி எம், சஞ்சய் பிரகாஷ்  மற்றும் கபிலர் என்ற கபிலன் ஆகியோருக்கு எதிராகவே  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்று என்ஐஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கடந்த மே 19 அன்று, சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள புளியம்பட்டி பிரிவு அருகே வாகனச் சோதனையின் போது, ​​இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிப் சன்னங்கள் மீட்கப்பட்டமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரும் விடுதலைப் புலிகளுடன்  தம்மை இணைத்துக்கொண்டனர் என்பதும், ‘உலகத் தமிழ் நீதிமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கியதும் விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4