கந்தகாடு புனர்வாழ்வு நிலைய சம்பவம்: ஜனாதிபதியின் விசேட பணிப்புரை
Mayoorikka
2 years ago

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண அறிக்கையை கோரியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிக்கையை ஜனாதிபதி கோரியுள்ளார்.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.



