காலநிலை மாற்றம் தொடர்பான 'கோப் 27' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி எகிப்து பயணம்!
Reha
2 years ago

எகிப்தில் இடம்பெறுகின்ற காலநிலை மாற்றம் தொடர்பான 'கோப் 27' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாட்டிலிருந்து பயணித்துள்ளார்.
இந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று அதிகாலை 2.50 அளவில் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.



