வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை
Kanimoli
3 years ago
வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மேல் மாகாண பிரதிப் காவல்துறை மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சில காவல்துறை உத்தியோகத்தர்கள் நெருக்கமாக செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.