இலங்கையில் பக்கவாதத்தினால் வருடாந்தம் 4,000 பேர் உயிரிழப்பு
Mayoorikka
2 years ago

இலங்கையில் வருடத்திற்கு சுமார் 4,000 பேர் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர் இரத்த அழுத்தமே பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைவதால் வருடத்திற்கு இரண்டு முறையாவது இரத்த அழுத்தத்தை அளவிட வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



