உணவில் இரசாயணப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை! சட்டமா அதிபர்
Mayoorikka
2 years ago

உணவில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயணப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் அடங்கிய தேங்காய் எண்ணெயை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரி சிங்களே அமைப்பின் செயலாளர் மதில்லே பஞ்சலோக தேரர் தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.



