பொருளாதாரச் சிக்கலால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாத நிலை
Prathees
2 years ago

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல, பாடசாலை ஆசிரியர்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
போக்குவரத்து சிரமம், பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை போன்ற காரணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு வரும் மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.



