தென்கொரிய பிரஜை ஒருவர் நீச்சல் குளத்தில் இறந்தநிலையில் மீட்பு

Kanimoli
3 years ago
தென்கொரிய பிரஜை ஒருவர் நீச்சல் குளத்தில்  இறந்தநிலையில் மீட்பு

தென்கொரிய பிரஜை ஒருவர் இன்று காலை வாதுவையில் உள்ள சுற்றுலா விருந்தகத்தின் நீச்சல் குளத்தில் இருந்து இறந்தநிலையில் மீட்கப்பட்டார்.

உயிரிழந்த நபர் 43 வயதுடையவர் என்றும் அவர் நேற்று மாலை விருந்தகத்துக்கு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த விருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரால் இந்த வெளிநாட்டவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மரணம் தொடர்பில் வாதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4