நாட்டில் தேடப்பட்டுவரும் 13 சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Kanimoli
3 years ago
நாட்டில் தேடப்பட்டுவரும் 13 சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

நாட்டில் தேடப்பட்டுவரும் 13 சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி யூனியன் பிளேஸில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட சட்டவிரோதக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் இந்தக் குழு உறுப்பினர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, அந்த சந்திப்பு தொடர்பில் பெறப்பட்ட காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் இதுவரை அடையாளம் காணப்படாத மற்றும் கைது செய்யத் தேடப்படும் சந்தேக நபர்களின் குழுவை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இக்குழுவினர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கொம்பஞ்சாவீதி பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி 0718591561 அல்லது குற்றப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி 0718594414 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோருகின்றனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4