ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை இல்லை : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Mayoorikka
2 years ago

ஓய்வு பெற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பினர் இன்று(12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடொன்றை பதிவு செய்தனர்.
ஓய்வு பெற்றவர்களுக்கான பணிக்கொடையை அரசாங்கம் ஒரு வருடமாக வழங்காமல் தாமதப்படுத்தியுள்ளதாக தெரிவித்து, ஓய்வு பெற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.



