பொருளாதார ஸ்திரப்படுத்தல் உபகுழுவின் தலைவராக சம்பிக்க தெரிவு!
Mayoorikka
2 years ago

பொருளாதார ஸ்திரப்படுத்தல் உபகுழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க போட்டியின்றி இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்குள் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதே உபகுழுவின் நோக்கமாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவினால் பொருளாதார ஸ்திரப்படுத்தல் உபகுழுவிற்கு பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் முன்மொழியப்பட்டது.
நசீர் அகமது, மனோ கணேசன் ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்தனர்.



