வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாக மீட்பு
Kanimoli
2 years ago

வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நாவுல காவல்துறை பிரிவிற்குட்பட்ட லேனமிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.
காவல் துறையினரால் மீட்கப்பட்ட அச் சடலத்தை வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
38 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
மேலும் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



