சஹாரானின் சாரதி உட்பட 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் பிணை

Prathees
3 years ago
சஹாரானின் சாரதி உட்பட 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் பிணை

மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வரை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லா 26ம் திகதி மாலை  பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களுக்கு தலா 35,000 ரூபா மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

 மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹமட் அமீன் சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4