வெகு விரைவில் மக்கள் அலையுடன் ஜனாதிபதியை சிறைப்பிடிப்போம் - எஸ்.எம்.மரிக்கார்

Kanimoli
3 years ago
வெகு விரைவில்  மக்கள் அலையுடன் ஜனாதிபதியை சிறைப்பிடிப்போம் - எஸ்.எம்.மரிக்கார்

பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடுமையாக்கப்பட்டால், வெகு விரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றிவளைத்து ஜனாதிபதியை சிறைப்பிடிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முடிந்தால் இதனை தடுத்து எதிர்க்கட்சியிலுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் சவால் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4