இலங்கையில் உருவான திரிபோஷா சர்ச்சைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது - சுகாதார அமைச்சு

Kanimoli
3 years ago
இலங்கையில் உருவான திரிபோஷா சர்ச்சைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது - சுகாதார அமைச்சு

இலங்கையில் அண்மையில் உருவான திரிபோஷா சர்ச்சைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அஃப்லாடொக்சின் அடங்கிய திரிபோஷா கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி திரிபோஷாவை பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அண்மைக்காலமாக திரிபோஷா தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இதனால் திரிபோஷாவை உண்பது தொடர்பில் எந்தவொரு கர்ப்பிணித் தாய்க்கும் தேவையற்ற அச்சம் இருக்க வேண்டாம் என குடும்ப சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அஃப்லாடொக்சின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட திரிபோஷா பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் கிளினிக்குகளில் வழங்கப்படும் திரிபோஷாவை பயன்படுத்த முடியும் எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன், திரிபோஷா நிறுவனம் வெளியிட்ட திரிபோஷா கையிருப்பில் அஃப்லாடொக்சின் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

அஃப்லாடொக்சின் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட திரிபோஷாவின் கையிருப்பு தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சும் திரிபோஷா நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4