இலங்கை பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக டுபாய்க்கு அனுப்பி மோசடி

Kanimoli
3 years ago
இலங்கை பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக டுபாய்க்கு அனுப்பி மோசடி

இலங்கை பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக டுபாய்க்கு அனுப்பி மோசடிகளில் ஈடுபடும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆரம்பித்துள்ளது.

மோசடி செய்பவர்கள் உறுதியளித்தபடி வேலை கிடைக்காததால் துபாயில் உள்ள தடுப்பு மையங்களில் பல பெண்கள் சிக்கித் தவித்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசாவில் டுபாய் சென்று இலங்கை பெண்கள் 85 பேர் தடுப்பு முகாம் ஒன்றில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக அந்த முகாமில் இருந்து வந்த பெண் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதன்போது, வேலை மோசடி காரணமாக நாட்டில் சிக்கித் தவிக்கும் 85 இலங்கைப் பெண்கள் குறித்து டுபாயில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளில் முதலீடு செய்து வருகின்றனர், இது பல குற்றவாளிகள் வேலை மோசடிகளில் ஈடுபடுவதற்கும் பொதுமக்களை ஏமாற்றுவதற்கும் உதவியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் நபர்கள், அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஐப் பார்வையிடவும் அல்லது இது தொடர்பான விசாரணைகளுக்கு 1989 என்ற இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை, வேலை மோசடிகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 011 2864 241 என்ற எண்ணின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தெரிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4