பால் புரையேறியதில் 10 மாத குழந்தை உயிரிழப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சியில் சம்பவம்

Mayoorikka
3 years ago
பால் புரையேறியதில் 10 மாத குழந்தை உயிரிழப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சியில் சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை பகுதியில் பால் புரையேறியதில் 10 மாதங்களேயான குழந்தை நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.

பால் கொடுக்கப்பட்ட போது புரையேறி குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த குழந்தையை அம்பன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் மரண விசாரணையை பருத்தித்துறை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா மேற்கொள்ளவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4