அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கவருகை தரும் போது பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் வெளியீடு
Kanimoli
2 years ago

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பிலான சுற்றுநிரூபத்தினை தயாரிப்பதற்குரிய ஆலோசனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



