கேகாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடல் நீதவான் முன்னிலையில் தோண்டியெடுப்பு!

#SriLanka #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
கேகாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடல்  நீதவான் முன்னிலையில் தோண்டியெடுப்பு!

கேகாலை, தெரணியகல, நூரி காவல் எல்லைக்குட்பட்ட நூரி தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடல் இன்று (12.01) அவிசாவளை நீதவான் பிரமோத் ஜெயசேகர முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 02 ஆம் திகதி சிறுவன் தனது தாய் மற்றும் தந்தையுடன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தான்.

பொலிஸார் நடத்திய ஆரம்பக் கட்ட விசாரணைகளில்  சந்தேகங்கள் எழுந்துள்ளதால், சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது குருவிட்ட சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவனின் மரணம் தொடர்பாக பலத்த சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் மற்றும் நூரி தோட்ட மக்கள் கடந்த 6 ஆம் திகதி போராட்டம் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது. 

ரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிப்படுத்தவும், முறையான விசாரணை நடத்தப்படவும் பிரதேசவாசிகள் கோரியுள்ளனர். 

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய, மேலும் பிரேத பரிசோதனைகளுக்காக இன்று அவிசாவளை நீதவான் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் பொலிஸார்  விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்        



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4