ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்த சந்தேகநபர்களை கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை நாடும் பொலிஸ்

Prasu
3 years ago
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்த சந்தேகநபர்களை கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை நாடும் பொலிஸ்

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றத்திற்காக தேடப்படும் நான்கு சந்தேக நபர்களின் படங்களை பொலிஸார் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

படத்தில் உள்ள நான்கு பேரையும் கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் நாடியுள்ளனர். மேலும் 0718 591 588 என்ற எண்ணிற்கு நேரடியாகவோ அல்லது வட்ஸ்அப் மூலமாகவோ தகவல்களை வழங்கலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4