சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 125 கிலோ வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது
Prasu
2 years ago

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 125 கிலோ அமோனியா நைட்ரேட் வெடிமருந்துகளை கெப் ஒன்றில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
தொம்பே, பனன்வல, தெல்கொட பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
500,000 ரூபா பணமும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர் 41 வயதுடைய ஹெலும்மஹர, தெகடன பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கைது செய்யப்பட்ட அம்மோனியா நைட்ரேட்டின் பெறுமதி சுமார் 18 இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக தொம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



