அலி சப்ரிக்கும் USAID அமைப்பின் உதவி நிர்வாகி ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு

Kanimoli
3 years ago
 அலி சப்ரிக்கும் USAID அமைப்பின் உதவி நிர்வாகி ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் USAID அமைப்பின் உதவி நிர்வாகியான Isobel Coleman ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறுள்ளது.

இந்த சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் உரைநிகழ்த்துவதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவில் தங்கியுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவரின் இலங்கைக்கான விஜயத்தின் போது, விவசாயிகளின் தேவைக்காக 40 மில்லியன் டொலர்களும், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மனிதாபிமான உதவியாக 20 மில்லியன் டொலர்களையும் அமெரிக்கா வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமந்தா பவரின் உதவி அறிவிப்புக்களின் படி இலங்கையின் திட்டமிடல்கள் உள்ளிட்ட விடயங்கள் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4