சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து

Prathees
3 years ago
சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட  பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து

சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரவில குறுக்கு சந்தி பகுதியில் பெண் ஒருவரின் கைப்பையை திருடிய சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது குறித்த அதிகாரி மீது சந்தேகநபர் கத்தியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் மாரவில பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பெண்ணின் கைப்பையும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4