20 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!
Mayoorikka
3 years ago
இலங்கையில் புதிதாக 96 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் பணிப்பாளர் விக்யான் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்து 20 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி, நாரஹேன்பிட்டி - எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
அதில் கலந்துக்கொண்டு கருத்துவெளியிட்டபோதே இதை கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சொந்தமான 214 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ள நிலையில், புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே