முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு

Mayoorikka
3 years ago
முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார லியனகேவிடம் வினவிய போது, ஒரு சில தட்டுப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் உரியவாறு முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.

தட்டுப்பாடு நிலவிய மருந்துக்கள் கிடைக்கப்பெறுவதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார லியனகே குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4