பதுளை கெலன்பில் தோட்டத்தில் தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை
#SriLanka
#Murder
Prasu
3 years ago
பதுளை - ஹிங்குருகம கெலன்பில் தோட்டத்தில் தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
83 மற்றும் 55 வயதுடைய பெண்களே நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
62 வயதுடைய மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகத்தை மூடிய நிலையில் வந்த சிலரே இவர்களை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இந்தநிலையில் இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.