சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த 16 வயது சிறுமி மரணம் - அதை தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை

பிரித்தானியா மெர்சிசைடிலுள்ள ஹேல்வுட் நகரத்தைச் சேர்ந்த Kayleigh Burns என்ற சிறுமி, நைட்ரஸ் ஆக்சைடை உட்கொண்ட சில நிமிடங்களில் சரிந்து விழுந்தார்.
இவர் வார்விக்ஷயரிலுள்ள லீமிங்டன் ஸ்பாவில் ஒரு வீட்டில் பார்ட்டியில் இருந்தார். அவரது சகோதரி Clare Baker (31), முதலில் ஹேல்வுட், Merseyside பகுதியைச் சேர்ந்த கெய்லீயின் நண்பர் ஒருவரிடமிருந்து, அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஒரு செய்தியைப் பெற்றதாக கூறினார். இதையடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிய மருத்துவமனைகளைச் சுற்றி அலைந்துள்ளார்.
ஆனால் கெய்லீ இறந்துவிட்டதாக மெர்சிசைட் காவல்துறை அதிகாரிகள் பிறகு அவரது வீட்டிற்கு வந்தனர். கெய்லீயின் 17வது பிறந்தநாளுக்கு சில வாரங்கள் இருந்தது என அவர் கூறினார்.
நார்த் லிவர்பூலைச் சேர்ந்த கிளேர் கூறியதாவது “என் சகோதரிக்கு கிட்டத்தட்ட 17 வயது ஆகவிருந்தது. அவள் எப்போதும் மிகவும் அன்பான சிறுமி. எங்களுக்குள் இருந்த உறவை என்னால் விவரிக்கவே இயலாது. கெய்லி வளர்ந்து நல்ல குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்தாள். அவள் ஒரு அன்பான குடும்பத்தில் இருந்தார். பின் வளரவளர அவள் தவறான நபர்களுடன் பழகினார்.
வீட்டில் பார்ட்டியில் இருந்தவர்கள், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கெய்லீ நைட்ரஸ் ஆக்சைடை சுவாசிக்கும் வீடியோக்களை அனுப்பினர். அதே இரவின் பிற் பகுதியில் அவள் சரிந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன் “மிகவும் சூடாக” உணர்வதாக கூறியுள்ளார்.
அதன்பின் மருத்துவனையில் அவர் இறந்தார். இந்த நிலையில் நைட்ரஸ் ஆக்சைட்டின் ஆபத்துகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். அத்துடன் மேலும் இந்த மருந்தை தடைசெய்ய வேண்டும் (அல்லது) அதற்கு வயது வரம்பை சேர்க்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.



