ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்க நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலில் பலம் வாய்ந்த ஒருவருக்கும் தற்போது ஆளும் கட்சியில் இருக்கும் பலமான ஒருவருக்கும் தெரிந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி அரசியலமைப்பில் உள்ள ஷரத்தின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதே அவர்களின் திட்டம்.
கட்சியில் இருந்து ஒருவர் தலைவரானால், அவரே கட்சியின் அதிகாரபூர்வ தலைவராக வருவார் என்று கட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கிலிருந்து சாதகமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் தற்காலிக தலைவராக மஹிந்த அமரவீரவை நியமிப்பது அவர்களது திட்டம்.



