கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பெருந்தொகை எரிபொருள் மீட்பு

Prabha Praneetha
3 years ago
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பெருந்தொகை எரிபொருள் மீட்பு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 33 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று (31) காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட 31 விசேட சுற்றிவளைப்புகளில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 1,108.9 லிட்டர் பெட்ரோல், 1,441 லிட்டர் டீசல், 9 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர்.


இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 1,220 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4