இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை - கஞ்சன விஜேசேகர
Prabha Praneetha
3 years ago
-1-1-1.jpg)
இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை என இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் வழங்கல் ஆகியவற்றைப் பிரித்து, இலங்கை மின்சார சபையின் தொகுப்பைத் தொடங்குவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவேன் என்று நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண மாற்றங்களும் தேவைப்பட்டாலும், அதிக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செலவைக் குறைக்கும் திட்டத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.



