கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம்

Prabha Praneetha
3 years ago
கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம்

கிளிநொச்சியில் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம் செய்வதில் அதிகாரிகள் மிகவும் நெருக்கடி நிலையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே எரிபொருள் சீரான முறையில் விநியோகம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வரும் ஒரு சில மக்கள் அதிகாரிகளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களையும் மிகவும் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை பாவிப்பதால் மனவுளைச்சலுக்கு ஆளாவதாக அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை - கந்தளாய் 91ம் கட்டை எரிபொருள் நிலையத்தில் இன்று(28) முதல் கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட பண தொகைக்கேற்ப எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுள்ளன.

இதன் போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.

இந்த திட்டத்தில் பிரதேச செயலக ஊழியர்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4