நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு குறித்து லிட்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்
Prathees
2 years ago

இந்த மாத இறுதிக்குள் எரிவாயு வரிசையை நிறுத்த முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாளாந்தம் 100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படுவதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
3700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்டு வந்த இரண்டு கப்பல்கள் தற்போது கடலில் இருப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.



