ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபரின் இறுதிச்சடங்கு செப்டம்பர் மாதம் நடாத்த தீர்மானம்
Prasu
3 years ago

ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த ஷின்சோ அபே கடந்த 8-ம் தேதி நரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஜப்பான் நாட்டின் கடல் சார் முன்னாள் உறுப்பினர் தெத்சுயா யமகாமி என்பவரால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப் பட்டார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செப்டம்பர் 27-ஆம் தேதி அபேவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் இறுதிச்சடங்கு நிப்பான் புடோகன் நகரில் நடைபெற இருக்கிறது. இவரின் இறுதி சடங்கில் பல நாடுகளின் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



