சபாநாயகரின் கோரிக்கைக்கு கட்சித்தலைவர்கள் இணக்கம்!

Mayoorikka
3 years ago
சபாநாயகரின் கோரிக்கைக்கு கட்சித்தலைவர்கள் இணக்கம்!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, நாளை நாடாளுமன்றில் நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பினை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு சபாநாயகர் முன்வைத்த கோரிக்கையை அனைத்து கட்சியின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இன்று மதியம் நாடாளுமன்றில் இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கோரல் நாடாளுமன்ற பொதுச்செயலாளரின் ஊடாக இன்று இடம்பெற்றிருந்தது.

இதன்படி, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகப்பெரும, அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4