கொழும்பில் பதற்றமான நிலை விமானப் படைகளும் களமிறக்கம்!

Nila
3 years ago
கொழும்பில் பதற்றமான நிலை விமானப் படைகளும் களமிறக்கம்!

கொழும்பில் தற்போது பதற்றமான நிலை உருவாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று மிகவும் தீவிரத் தன்மை அடைந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் பிரதமர் அலுவலகத்தை சுற்றி சற்றுமுன் விமானப்படை ஹெலிகாப்டர் சுற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு மேலே விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டு வருகிறது. விமானத்தின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4