போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

Mayoorikka
3 years ago
போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களை பாதுகாக்க அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மேலும் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றார்.

திருட்டு மற்றும் சேதம் ஏற்பட்டால் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் உள்ள பல தொல்பொருட்கள் மற்றும் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மூன்று அரச கட்டிடங்களை தாக்கி ஆக்கிரமித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4