தப்பிக்க முயற்சிக்கும் பசில்! மத்தள விமான நிலையத்தின் கதவுகளும் மூடப்பட்டன
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் பிரமுகர் அனுமதி நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
அரசியல் பிரமுகர்கள் விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் தமது பணிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
இதன்படி மத்தள சர்வதேச விமான நிலையத்தின் விஐபி டெர்மினலில் விஐபி அனுமதி வழங்கப்படமாட்டாது என குடிவரவு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



