இலங்கையில் நாளை தேசிய துக்க நாள்
Prathees
3 years ago

ஜப்பானின் முன்னாள் பிரதமர் திரு.ஷின்ஷோ அபேயின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் பொதுநிர்வாகஇ உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் அன்றைய தினம் பொது விடுமுறை தினமாக இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



