ஜனாதிபதியின் இருப்பிடம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
#SriLanka
#Gotabaya Rajapaksa
Prasu
3 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தை கோடிட்டு இந்திய செய்திச்சேவை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், தாம் எதிர்வரும் 13ஆம் திகதியன்று பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கையில் நெருக்கடி நிலை மோசமடைந்ததையடுத்து, தாம் பதவி விலகத் தயாராக இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறிவித்தார்.