மனோஜ் ராஜபக்ச,அமெரிக்காவில் வசித்து வரும் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம்

Kanimoli
3 years ago
 மனோஜ் ராஜபக்ச,அமெரிக்காவில் வசித்து வரும் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதல்வர் மனோஜ் ராஜபக்ச, அமெரிக்காவில் வசித்து வரும் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக பதவி விலகுமாறு அறிவிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையும் போராட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்டது. இவ்வாறான நிலைமையில், அமெரிக்காவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் புதல்வரின் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4