அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்றி நாட்டை நடத்துவது தவறு – ரணில்
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்றி நாட்டை நடத்துவது தவறு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குமாறு தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போதைய அரசாங்கம் பதவி விலகியவுடன் புதிய அரசாங்கம் ஒன்றை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



