கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

Kanimoli
3 years ago
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

எரிபொருள் பிரச்சினை உட்பட பொருளாதார நெருக்கடி காரணமாக கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர விலங்கு பண்ணைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 4,000 க்கும் அதிகமானோர் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக விலங்கு பண்ணை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் 3,200 ரூபாவாக காணப்பட்ட கோழி தீவனம் பொதி ஒன்றின் விலை 13,000 ரூபா வரையில் அதிகரித்துள்ளதுடன், கோழி இறைச்சிக்கு கடும் தட்டுபாடு நிலவியுள்ளதுடன்,முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளது.
இந்த நிலை தொடரும் பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் கோழி,முட்டை விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தற்போது முட்டையொன்று 45 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1000 ரூபாயிலிருந்து 1100 ரூபாய் வரைக்கு விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4