பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Mayoorikka
3 years ago
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசியர்கள் சேவை சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர்களின் கல்வி தொடர்பில் சிந்தித்து எரிபொருள் இன்மையினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்கால சந்ததியினர் தொடர்பில் சிந்திக்க வேண்டிய நாட்டின் தலைவர்கள் சுயநலமாக சிந்தித்தமையே இதற்கு பிரதான காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தினை சீரழித்து தற்போதைய சிறுவர்களின் கல்வியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4