அதிக பணவீக்கம் காரணமாக ஜிம்பாப்வேயின் அதிகாரப்பூர்வ நாணயம் கைவிடப்பட்டது

#SriLanka #Dollar
அதிக பணவீக்கம் காரணமாக ஜிம்பாப்வேயின் அதிகாரப்பூர்வ நாணயம் கைவிடப்பட்டது

அதிகாரப்பூர்வ நாணயத்தை கைவிட ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது. நாடு எதிர்நோக்கும் பணவீக்கமே இதற்குக் காரணம். அதன்படி, ஜிம்பாப்வே டொலருக்கு பதிலாக தங்க நாணயத்தை தனது உத்தியோகபூர்வ நாணயமாக பயன்படுத்த சிம்பாப்வே அரசாங்கம் தயாராகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக ஜிம்பாப்வே மத்திய வங்கி தங்க நாணயத்தை விற்பனை செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க நாணயத்தை வரும் 25ம் தேதி முதல் விற்பனை செய்ய ஜிம்பாப்வே மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் ஜிம்பாப்வே மாநிலம் தற்போது பணவீக்கம் மிகுந்த நிலையில் உள்ளது. தற்போது நாட்டின் பணவீக்கம் 191 சதவீதமாக உள்ளது. தற்போதைய உயர் பணவீக்க நிலைமையுடன் நாட்டின் நாணயத்தின் பெறுமதி மிகவும் குறைந்த பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4