இலங்கை மக்களுக்கு... மூன்று வேளை,  உணவு கிடைப்பதில் சிக்கல்!

#SriLanka #meal #Day
இலங்கை மக்களுக்கு... மூன்று வேளை,  உணவு கிடைப்பதில் சிக்கல்!

இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக குடும்ப உறுப்பினர்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சத்தான உணவை உண்பதற்காக இலங்கை குடும்பம் மாதம் ஒன்றுக்கு 93 ஆயிரத்து 675 முதல் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 868 ரூபாய் வரை வருமானம் ஈட்ட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கை குடும்பம் ஒன்றின் சராசரி வருமானம் மாதாந்தம் 76 ஆயிரத்து 414 ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சனத்தொகையில் 20 வீதமான வறிய குடும்பங்களின் மாத வருமானம் 17 ஆயிரத்து 572 ரூபாய் எனவும் உத்தியோகபூர்வ தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4