அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு ஏழு எரிபொருள் கப்பல்கள் வருகை - ஹரின் பெர்னாண்டோ

Prabha Praneetha
3 years ago
அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு ஏழு எரிபொருள் கப்பல்கள் வருகை - ஹரின் பெர்னாண்டோ

ஏழு எரிபொருள் கப்பல்கள் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் உள்ள கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இவை அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள். 40 ஆயிரம் மொற்றி தொன் டீசல் எதிர்வரும் 8,9 ஆம் திகதிகளில் வரும். கழிவு எண்ணெயை ஏற்றிய கப்பல் 10 ஆம் திகதிக்கும் 11 ஆம் திகதிக்கும் இடையில் வரும். மற்றுமொரு டீசல் கப்பல் 19 ஆம் திகதி வருகிறது.

13 ஆம் 15 ஆம் திகதிகளுக்கு இடையில் பெட்ரோல் கப்பல் ஒன்று வருகிறது. 15 ஆம் திகதி கச்சாய் எண்ணெய் கப்பல் வருகிறது. அதே தினத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் டீசல் கப்பல் ஒன்றும் வருகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4