தொடரூந்து விபத்து சிகிச்சை பலனின்றி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Kanimoli
3 years ago
தொடரூந்து விபத்து சிகிச்சை பலனின்றி குடும்பஸ்தர்  உயிரிழப்பு

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று(04) பிற்பகல் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கிச் சென்ற தொடரூந்து வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சம்பவத்தில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ருக்சன் வயது (33) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக செட்டிகுளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4